பத்து மாதம் கருதாங்கி பல முறை வலிதாங்கி பக்குவமாய் கலையாத கனியாய் என்னை ஈன்றாய் ஈன்றபின் உன் வேலையை இரட்டிப்பாக்கி தூக்கத்தை பாதியாக்கி நான் அழுதால் என் தாகம் தணிப்பாய் நீ உன் உணவை எனக்காய் ஒதூக்கி வைப்பாய் அழுது குமுறி என் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை உன் பெயரன்றோ… தட்டு தடுமாறி தவழந்து முதல் அடி எடுக்க துணை நிற்பதும் உன் கைகள் அன்றோ… இரவில் நான் உறங்க இதம் சேர்ப்பது உன் தாலாட்டன்றோ… இன்னலில் நான் தவிக்கும் போது தட்டி கொடுப்பதும் உன் தோள் அன்றோ… உனக்கு நான் வலியை தவிர என்ன தந்தேன் காலங்கள் சென்றாலும் என் முதல் பிள்ளையாய் உன்னை பாதுகாப்பேன்… அம்மா விற்கு பொருள் அ ன்பு ஒருபோது ம் மா றாதவள் என்று உணர்த்தியவளே... உனக்கு இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்… லியோ... Happy Mothers Day #tamilnadu #tamil #chennai #india #kerala #tamilmemes #love #thalapathy #coimbatore #kollywood #tamilanda #madurai #instagram #tamilan #photography #followme #memes #kavithaikirukanleo #bangalore #thala #delhi #vijay #tamilcinema #tamily #mokkapostu #...
தமிழ் கவிதைகளின் காட்சி சாலை.